ழகரம் ழகரம் தமிழகரம்
தமிழின் அழகே எழிழகரம்
ஆழியில் பொழியும் மழையே ழகரம்
விழியில் வழியும் அமிழ்தே ழகரம்
மகிழ்ச்சியில் பழுக்கும் பழமே ழகரம்
நெகிழ்ச்சியில் தழைக்கும் நிழலே ழகரம்
உழவும் தொழிலும் கமழ்ந்திடும் ழகரம்
மழுவும் கழிவும் கழிந்திடும் ழகரம்
வாழ்வும் தாழ்வும் பிறழும் ழகரம்
பழுதும் விழுதும் ஒழியும் ழகரம்
தொழுகையும் அழுகையும் வாழ்வின் வழக்கம்
எழுகையும் முழுகையும் முழவின் முழக்கம்
வாழையும் தாழையும் செழிப்பின் பழக்கம்
கோழையும் மோழையும் அழிவின் புழுக்கம்
வாழ்வென்னும் வழியில் குழிகள் பழிகள்
காழ்ப்பென்னும் சுழியில் பழுதுகள் விழுதுகள்
தாழ்வென்னும் தகழியில் தழைகள் பிழைகள்
வீழ்கென எழும்பும் வேழமும் சூழுமும்
தாழ்ப்பாழ் அழுந்திட நழுவிடும் பொழுதினில்
கொழுந்தென எழுந்திடும் பழமையின் பொழில்கள்
தழுவிடத் தழுவிட அவிழ்ந்திடும் எழில்கள்
வழிந்திடும் விழியில் அமிழ்ந்திடும் அமிழ்து
வாழைப் பழச்சாறோ இதழின் உமிழ்ச்சாறோ
தாழைப் புழையூரில் பொழியும் கூழாறோ
தாழப் பழுவூரில் இழையும் குழலேறோ
ஆழப் புகழூரில் தழையும் மழை ஊற்றோ
நிகழும் பொழுதெல்லாம் உழைப்பின் இழையன்றோ
திகழும் செழுப்பெல்லாம் மழையின் பொழிவன்றோ
மழலைச் சிமிழ்எல்லாம் மகிழ்வின் விழையனறோ
தமிழின் புகழ்எல்லாம் செம்மொழி வழியன்றோ
தமிழின் அழகே எழிழகரம்
ஆழியில் பொழியும் மழையே ழகரம்
விழியில் வழியும் அமிழ்தே ழகரம்
மகிழ்ச்சியில் பழுக்கும் பழமே ழகரம்
நெகிழ்ச்சியில் தழைக்கும் நிழலே ழகரம்
உழவும் தொழிலும் கமழ்ந்திடும் ழகரம்
மழுவும் கழிவும் கழிந்திடும் ழகரம்
வாழ்வும் தாழ்வும் பிறழும் ழகரம்
பழுதும் விழுதும் ஒழியும் ழகரம்
தொழுகையும் அழுகையும் வாழ்வின் வழக்கம்
எழுகையும் முழுகையும் முழவின் முழக்கம்
வாழையும் தாழையும் செழிப்பின் பழக்கம்
கோழையும் மோழையும் அழிவின் புழுக்கம்
வாழ்வென்னும் வழியில் குழிகள் பழிகள்
காழ்ப்பென்னும் சுழியில் பழுதுகள் விழுதுகள்
தாழ்வென்னும் தகழியில் தழைகள் பிழைகள்
வீழ்கென எழும்பும் வேழமும் சூழுமும்
தாழ்ப்பாழ் அழுந்திட நழுவிடும் பொழுதினில்
கொழுந்தென எழுந்திடும் பழமையின் பொழில்கள்
தழுவிடத் தழுவிட அவிழ்ந்திடும் எழில்கள்
வழிந்திடும் விழியில் அமிழ்ந்திடும் அமிழ்து
வாழைப் பழச்சாறோ இதழின் உமிழ்ச்சாறோ
தாழைப் புழையூரில் பொழியும் கூழாறோ
தாழப் பழுவூரில் இழையும் குழலேறோ
ஆழப் புகழூரில் தழையும் மழை ஊற்றோ
நிகழும் பொழுதெல்லாம் உழைப்பின் இழையன்றோ
திகழும் செழுப்பெல்லாம் மழையின் பொழிவன்றோ
மழலைச் சிமிழ்எல்லாம் மகிழ்வின் விழையனறோ
தமிழின் புகழ்எல்லாம் செம்மொழி வழியன்றோ

0 Comments:
Post a Comment
<< Home